Monday, March 17, 2014

மனதளவு வாழ்கை

ஒரே முறை தான்
புளியமரத்து பேய் கதையை
பாட்டி எனக்கு சொன்னாள்.
எப்போது, எங்கே ஒற்றை புளியமரம்
கண்டாலும்...ஒரு பேய் தலை கீழாய் 
தொங்கிகொண்டு தான் இருக்கிறது;
இன்றளவும்!
பேயும்,பயமும் தொங்குவது
நிஜத்தில் அந்த மரத்திலா? 
இல்லை இந்த மனத்திலா?
-ஆறு

No comments:

Post a Comment