Wednesday, October 1, 2014

பழக மொழிக...பழமொழிக(ள்)

முதல் கடிதம்:
வாங்க பழகலாம்!
சில் வண்டுச் சித்திரமே,

சித்திரம், கை பழக்கம் என்பார்களே!
கொஞ்சம் உன்னை பழக தருவாயா?


தேனிசை கூ ட குரல் பழக்கமே
என்று கேள்வி!
ஒரு பொழுது உன்னோடு பேசி-பழக
நீ வந்திசைந்திட மாட்டாயா,
பெண் நிற பாடலமுதே?

அனேக ஏக்கத்தோடு,
இவன்.


பதில் கடிதம்:

எலேய்!

எல்லாம் இருக்கட்டும்,
"பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே"
என்று கூவி கடுக்கா கொடுக்க மாட்டாயே?

சந்தேக நோக்கத்தோடு,
இவள்.


-ஆறு

ஞான வெளி

பெரிதளவில் பொருட்படுத்தபடாத,
கைக்கு அடக்கமாக
தினம் தினம் சின்னஞ்சிரு 
மரணத்தை கட்டிலில் பயின்றே இந்த பயனம்!
சேரும் இடமோ ஒரு நீண்ட நெடும் உறக்கம்!
----------------------------------------------------

மரத்தின் பொது நலம்...
பசியாற பழம்!
மரத்தின் சுய நலம்...
பழத்திற்குள் விதை!

-----------------------------------------------------------

அறு சுவை உணவு முடிந்தது.
இலை எடுத்து போட்டு,
பசியில் வயிற்றை தடவுகிறான்,
உணவகத்தில் இலை எடுக்கும்
சிறுவன்!

------------------------------------------------------

வெயில் களைந்து நிழல்
தரும் கிளைகள், சதா
வெப்பம் தாங்கி வாடுகிறதே என,
கவலை கொண்டு சொன்னால்,
என்னை பித்தன் என்பீரா?

-------------------------------------------------------------

அடைந்து களிப்புரவும், இழந்து கலங்கிடவும்
நடுவிலான உள்ள அந்த தெளிவற்ற உறவில் 
வசிக்கும் அலைகள், 
என்ன செய்யும் பா வம் 
வாரிச் சொரிந்த, கரை மனலை?
அயர்ச்சியுற வில்லை, சலிப்பு தட்டவில்லை, 
தயங்கிப் பகிறும் அந்த காதலை பார்க்க...பார்க்க!

--------------------------------------------------------------

இந்தச் சாலை வளைவின் 
திரைமறைவில் என்னதான் ஒளிந்திருக்கும்?!
கண்டுகொண்டேன்....
வளைவின் இறுதியில் எதையோ
ஒளித்து வைத்திருக்கும் இன்னும்
சில வளைவுகள்!


--------------------------------------------
இதழ் குவிந்து, கன்னம் தொடும் சத்தம்,
ஒன்று...இரண்டு...மூன்றாய் தரை
தொடுகிறது விதை.
அதுசமயம் எங்கோ...
யாரும் காணாத இருட்டில்,
காதலியின் கன்னத்தில்,
விதை விழுந்து, மணல் தொட்டு புதையும்
சத்தம்!
ஒன்று...இரண்டு...மூன்றாய்
விதைக்க படுகிறது முத்தம்.

ஞான வெளியில் இவ்விரண்டும்
இரு வேறு செயல்களன்று!

-ஆறு

ஹைக்கூ போல சில

யாரோ புள்ளி வைத்துவிட்டு, கோலமிட மறந்த வெளி
-இரவின் வானம்!
------------------------------------------------------------------
காற்றினால், செவி மடலத்தின் நடனம்.
-இசை!
------------------------------------------------------------------
"இடுக்கன் வருங்கால் நகுக"
படித்திருக்குமோ அறுவி?
விழும்போதும் பால் போல் சிரிக்கிறதே!
------------------------------------------------------------------
உலைஞ்ஞாயிரை உருக்கவல்ல,
உருகுமொரு உறையாபனித்துளி.
-காலம்.


ஆறு

ஆதியின் மூலம்?

எங்கிருந்தோ வந்த எண்ணங்கள்,
எண்ணங்களில் இருந்து வந்தவையாய் 
நான் நம்பி, அட்சரப் படுத்தியதும்...
கடத்த பட்டன, 
எவர் எவர் எண்ணங்களுக்கோ
எனது எண்ணங்கள்!

எங்கோ பிறந்து...
எங்கோ கலந்தன...
உயிர் போல!

எங்கும் பிறந்து...
எங்கும் கலந்தன...
உயிரை போலவே!
-ஆறு