Monday, March 17, 2014

மனதளவு வாழ்கை

ஒரே முறை தான்
புளியமரத்து பேய் கதையை
பாட்டி எனக்கு சொன்னாள்.
எப்போது, எங்கே ஒற்றை புளியமரம்
கண்டாலும்...ஒரு பேய் தலை கீழாய் 
தொங்கிகொண்டு தான் இருக்கிறது;
இன்றளவும்!
பேயும்,பயமும் தொங்குவது
நிஜத்தில் அந்த மரத்திலா? 
இல்லை இந்த மனத்திலா?
-ஆறு

பயத்தின் ஆறடி விதை

கொறிக்கும் குலை நடுங்க
தன் ஈரக் குலை நடுநடுங்க
புயல் எனசரண் பூந்தது முயல்,
தன் நிலையது, வளை எது புரியாமலே! 
விட்ட மூச்சும் தொட்டிடாத போதும்-நான்
கிட்டே வந்து முட்டிடாத போதும்
கிலிபிடித்து சிதறியோடும்
சிட்டு குருவிகளே, பட்டு பூச்சிகளே
போதும்...போதும்! 
ஆலமெய்தும் அரவத்தினை 
புல்லுருவும் பார்வைக்கு-இணை
எள்ளித்-துருவும், புறக்கணிப்புகளும்! 
போதும் போதும்!
 
ஆடு நனைய அழும் ஓனாய் - நீ
காடு பதறுவதாகவோ பதறினாய்?
உன் மீது பிண வாசம்
பசியாமலேயே-புசியாமலேயே 
தின்ன உயிர்களின்
வீச்சமுன்னுடம்பில் தின வாசம்!
புறக்கணிப்பில்லை...
புறமுதுகு எங்கள் வழியில்லை
விலி அது என அறிவாய்-நீ
வலி(வு) மிகு கொள்வதாய் எண்ணும்
அழிவின், கழிவின், பயத்தின்
விதை! 
  
-ஆறு

இடையிடயே பொருள்

ஒரு வாக்கியத்தில் இருவார்தைகள் இருந்தன...
முன்னுக்கும் பின்னும்
பின்னுக்கு முன்னுமான இடையில்
வெளுத்து கிடந்தது- வெத்து வேளி;
கண்களில் படாத,  
மெய்யினை மேவாத,
இரு சொற்களுக்குமான உறவை
அரூபத்தில் சலனமின்றி சுமந்தபடி!
-ஆறு

ஒரு துளி வானம்

கருமின்னல்கொடி இருதனல்துளிகளெனவே-சிதறி 
விழுந்த பெருநல் விழிகளதுவே...
கனி இதழ் தான் சிரிக்கயிலே ஒருகனம்
மூடித்திறந்திடுமே... அவை கொஞ்சம் மூடித் திறந்திடுமே
அந்தத் தளிர்நேரப் பொழுதினிலே 
சருகாக குளிர்நேர்பார்வைகள் உதிர்ந்து போகுமடி!
அது காதல் வேர்வரை துளிர்ந்து உரமாகுமடி!
நிலவொளிகள் கோடிதேக்கும் 
மாய மன்றமொன்று...தோடிபூக்கும் 
தேயமடியானதென்று...
நிலைகுலைந்து அங்கே விழுந்தேனடி-அது
மலர் சொட்டும் மனங்கமழ் தேனடி!
கடைவாய் கோடியில் ஆசைகள் தேக்குவதேனடி?
நிலவாய் கொடியில் மலர்ந்த நீ, ஒருதுளிவான் அடி!

வேண்டுமென்றே நாணும் உனை  செய்த்திடுவாய்
நாளும் நானும் உனை தழுவிட
வெண்டுமென்றே வேண்டுதல் பறபலச்  செய்திடுவாய்
பனியினும் பஞ்சுதுனியினும் நலிந்த நல்லரை
சிறையினும் சிறிது கொடிதெனக் கண்டேனே
பகலிலும் அந்தி இருளிலிலும் உன்னுடனே
களிப்பெய்தி வாழ்ந்திருப்பேன் மடமயிலே நானே!
-ஆறு

நிழல் பொசுக்கும் போதி மரம்



முடிவில்லா பாலைவனமொன்று
ஆயிரமாயிரம் போதி மரங்கொண்டு!
அடி கண்ணெ...அத்தனை 
மரங்களிருந்தென்ன?
தரை வெம்மி கொதிக்கிறது... 
பாளம் பாளமாய் வெடித்து கிடக்கிறது.
இங்கே போதி மரங்களிடம்
நிழல் இல்லை! உச்சி கொப்பிலே
விதை களுண்டு ஞானப்பழமில்லை! 
-ஆறு