Monday, March 17, 2014

ஒரு துளி வானம்

கருமின்னல்கொடி இருதனல்துளிகளெனவே-சிதறி 
விழுந்த பெருநல் விழிகளதுவே...
கனி இதழ் தான் சிரிக்கயிலே ஒருகனம்
மூடித்திறந்திடுமே... அவை கொஞ்சம் மூடித் திறந்திடுமே
அந்தத் தளிர்நேரப் பொழுதினிலே 
சருகாக குளிர்நேர்பார்வைகள் உதிர்ந்து போகுமடி!
அது காதல் வேர்வரை துளிர்ந்து உரமாகுமடி!
நிலவொளிகள் கோடிதேக்கும் 
மாய மன்றமொன்று...தோடிபூக்கும் 
தேயமடியானதென்று...
நிலைகுலைந்து அங்கே விழுந்தேனடி-அது
மலர் சொட்டும் மனங்கமழ் தேனடி!
கடைவாய் கோடியில் ஆசைகள் தேக்குவதேனடி?
நிலவாய் கொடியில் மலர்ந்த நீ, ஒருதுளிவான் அடி!

வேண்டுமென்றே நாணும் உனை  செய்த்திடுவாய்
நாளும் நானும் உனை தழுவிட
வெண்டுமென்றே வேண்டுதல் பறபலச்  செய்திடுவாய்
பனியினும் பஞ்சுதுனியினும் நலிந்த நல்லரை
சிறையினும் சிறிது கொடிதெனக் கண்டேனே
பகலிலும் அந்தி இருளிலிலும் உன்னுடனே
களிப்பெய்தி வாழ்ந்திருப்பேன் மடமயிலே நானே!
-ஆறு

No comments:

Post a Comment