Friday, August 26, 2016

உன்னை போக விடாமல்.


வெகு நேரம் ஆகியிருக்க கூடும்...
புதிதாய் சிறகு முளைத்து,
புத்துணர்வோடு சிறகடிக்கும்
சிட்டு குருவி போல நீ,
கையசைத்து பேச ஆறம்பித்து!
அழகாய் சிறகடித்தாலும்
ரசிக்க எவரும் இல்லை என்று,
சுவாரஸ்யம் இழந்த குருவி....
உற்று முறைத்தது!
நான் என்ன செய்ய?!
என்ன நீ பேசுகிறாய் என்பதை விட,
'பேசுவது நீ'
என்பதை கவனத்தோடு ரசிப்பதிலேயே
என் கவனம் முழுதும் செலவாகிறது!
பரிதபமாய் கவனிப்பவன் பொல
தலையசைக்கதுவங்கினேன்.
நீயும் ஆசிரியை போல
விடாமல் தொடர்ந்தாய்!

நீ பேசி முடித்த பின்னரும்,
தலையசைப்பது
மீதம் இருந்ததை உணர்ந்து...
அடிக்க வந்த உன்னடமிருந்து விலகி,
அருகிலிருந்த
குங்குசிமிழிலிருந்து ஒரு துளியெடுத்து
உன் நெற்றியில் இட்டதும்;
அது முத்தமாய் மாறியது!

வெட்கத்துடன்
செய்வதன்று தெரியாமல்
வீட்டுக்கு வெளியில் வந்தாய்.
வெளியில் இருக்கும் சூரியன்
நேரம் தவறி வந்தோமோ என்று
மேற்கில் மறைய,
வின் மீன் கூட்டம் முளைத்து,
விட்டு விட்டு புன்னகைத்து
உன்னை அழைக்கிறது
வானிற்கு!

நிலவே...
உன்னை போக விடாமல்,
குழந்தையாய்
அடம் பிடிக்கிறேன்!

-ஆறு

No comments:

Post a Comment