Thursday, August 25, 2016

ஆள் அடயாளமே மாறி பொய்ட்ட!

"ஆருண்டு தெருயுதா?ஆண்டிபட்டி மாமா'டீ...
போன வருச கொட-திருவிழால
ராட்டினம் எல்லாம் ஏத்தி உட்டானே...மறந்துட்டியாக்கும்?
முட்டாய் எல்லாம் வச்சிருக்கான் டீ...போ மாமாட்ட போ"
என்று எத்தனை சொல்லி பழக்கிவிட முயன்று
என் இடுப்பில் ஏற்றிவிட்டாலும்....
வழுக்கி கொண்டு திமிரும்
மருமகளை நினைவில் இறுக்குகிறது...
ஆறு மாதம் முன்பு
ஆசையாய் வாங்கி-
இழந்து, இளைத்து
இளைத்து இழந்துவிட்ட
எனதிந்த கால்சட்டை!

-ஆறு

No comments:

Post a Comment