Friday, August 26, 2016

கார்த்திகை!


வழுவழுத்த, எண்ணைபூசிய கையால்
துள்ளித் திமிர்வதை பிடிக்கையில்
நழுவிக்கொண்டோடும் மீனை போல
அந்திச்சூரியன்- சிறிது சிறிதாய்
வழுக்கி விழுகின்ற கார்த்திகைத் திருமாலை!


கடைசிப் பிடியும் சருக்கிப்போக...இந்த வழுவழுத்த
புவியில், சூரியச் சுண்டுவிரல் கீரல் விழ...
ஒன்று,இரண்டு,மூன்றாய் முளைக்கலாயின...
சின்ன-சின்ன பகலவன்கள்!
நான்காவது சூரியக் குளியில், நீ, திரியிடுகிறாய்...இப்போது!

கூடிப் பிரிந்து, ஆடி களித்து, கலகலத்து,
கதை பேசி, பின்...காதோடு கொஞ்சம் அந்தரங்கம்
புழங்கும் தேவதைகளின் அந்தபுர தோழிகளோ
உன் வலக்கை இடமிருக்கும் வளையல்கள்?!
திரிக்கையிலும்,ஊற்றுகையிலும்,ஏற்றுகையிலும் சலசலப்பு!

யசோதை சீலைத்தலைப்பை விடாது பிடித்து
அவள் எங்கு வந்தாலும் வால்பிடிக்கும் சின்ன கண்ணனோ...
அந்தத் தங்கக் கால்களை வளைத்து வாஞ்சையாய்
பிடித்திருக்கும் வெள்ளிப் பிள்ளைகள்?!
நீ நடக்கையிலெல்லாம் ஒரே சினுங்கல்களடி!

நீ உதிக்க விட்ட விளக்குகளால்
பரவிக் கிடக்கும் ஒளியை உருக்கி,
அள்ளி-அள்ளி தெளித்துன் முகம் கழுவிக் கொண்டாயோ?!
எஞ்சிய சுடர்த் துளிகள் மெல்ல வழிந்து
தரையில் சொட்டும் ஒலி வளர்ந்து...
வீடெல்லாம் பண்டைத் தமிழ் யாழிசை ஒலிக்குதடி!

பச்சை பட்டுடுத்தி, கற்றை குழல் செர்த்து முடிந்த
முழு நிலவே...கொஞ்சம் எனக்காக அத்துளிகளை
குழலிசைக்க செய்வாயா?
செய்தாலும் நீ மறுத்தாலும்
வருத்தமில்லை...போ!
கொல்வதும் எனைக் கொள்வதும்
இனியுன் விருப்பம்..போ!

-ஆறு

No comments:

Post a Comment