Thursday, August 25, 2016

இரவின் அறிமுகமின்மை

சமூகம் விசித்திரமானது.
சிலிர்த்து மகிழவே சொல்கிறது...
சிப்பிக்குள் சுடர் உறைந்து
நிலா விளைந்தால்...
ஓசைகள் பழுத்து, 
கனி உதித்தால்!

எங்கள் பள்ளியறை மெத்தை ஓரம்
முதற் புலறியில், திடுக்கிட்டு எழுந்த 
அவளின் முதற் வினாடியின் நிஜத்திற்குள்
அன்னியம் மின்னலாய் படர்ந்து,
பின் மறைந்தும்போனது!

அரைகனமே என்றாலும் உள்ளத்தடுமாற்றம்;
உண்மையில் நிலவிற்கு சிப்பி புத்திடம்...
கனி, மரமேறவே துடித்திடும்!
காலமன்றி என் காதல் இதை கைகொள்ளும்!

-ஆறு

No comments:

Post a Comment