Wednesday, October 1, 2014

ஞான வெளி

பெரிதளவில் பொருட்படுத்தபடாத,
கைக்கு அடக்கமாக
தினம் தினம் சின்னஞ்சிரு 
மரணத்தை கட்டிலில் பயின்றே இந்த பயனம்!
சேரும் இடமோ ஒரு நீண்ட நெடும் உறக்கம்!
----------------------------------------------------

மரத்தின் பொது நலம்...
பசியாற பழம்!
மரத்தின் சுய நலம்...
பழத்திற்குள் விதை!

-----------------------------------------------------------

அறு சுவை உணவு முடிந்தது.
இலை எடுத்து போட்டு,
பசியில் வயிற்றை தடவுகிறான்,
உணவகத்தில் இலை எடுக்கும்
சிறுவன்!

------------------------------------------------------

வெயில் களைந்து நிழல்
தரும் கிளைகள், சதா
வெப்பம் தாங்கி வாடுகிறதே என,
கவலை கொண்டு சொன்னால்,
என்னை பித்தன் என்பீரா?

-------------------------------------------------------------

அடைந்து களிப்புரவும், இழந்து கலங்கிடவும்
நடுவிலான உள்ள அந்த தெளிவற்ற உறவில் 
வசிக்கும் அலைகள், 
என்ன செய்யும் பா வம் 
வாரிச் சொரிந்த, கரை மனலை?
அயர்ச்சியுற வில்லை, சலிப்பு தட்டவில்லை, 
தயங்கிப் பகிறும் அந்த காதலை பார்க்க...பார்க்க!

--------------------------------------------------------------

இந்தச் சாலை வளைவின் 
திரைமறைவில் என்னதான் ஒளிந்திருக்கும்?!
கண்டுகொண்டேன்....
வளைவின் இறுதியில் எதையோ
ஒளித்து வைத்திருக்கும் இன்னும்
சில வளைவுகள்!


--------------------------------------------
இதழ் குவிந்து, கன்னம் தொடும் சத்தம்,
ஒன்று...இரண்டு...மூன்றாய் தரை
தொடுகிறது விதை.
அதுசமயம் எங்கோ...
யாரும் காணாத இருட்டில்,
காதலியின் கன்னத்தில்,
விதை விழுந்து, மணல் தொட்டு புதையும்
சத்தம்!
ஒன்று...இரண்டு...மூன்றாய்
விதைக்க படுகிறது முத்தம்.

ஞான வெளியில் இவ்விரண்டும்
இரு வேறு செயல்களன்று!

-ஆறு

No comments:

Post a Comment