Wednesday, October 1, 2014

பழக மொழிக...பழமொழிக(ள்)

முதல் கடிதம்:
வாங்க பழகலாம்!
சில் வண்டுச் சித்திரமே,

சித்திரம், கை பழக்கம் என்பார்களே!
கொஞ்சம் உன்னை பழக தருவாயா?


தேனிசை கூ ட குரல் பழக்கமே
என்று கேள்வி!
ஒரு பொழுது உன்னோடு பேசி-பழக
நீ வந்திசைந்திட மாட்டாயா,
பெண் நிற பாடலமுதே?

அனேக ஏக்கத்தோடு,
இவன்.


பதில் கடிதம்:

எலேய்!

எல்லாம் இருக்கட்டும்,
"பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே"
என்று கூவி கடுக்கா கொடுக்க மாட்டாயே?

சந்தேக நோக்கத்தோடு,
இவள்.


-ஆறு

No comments:

Post a Comment