Wednesday, October 1, 2014

ஹைக்கூ போல சில

யாரோ புள்ளி வைத்துவிட்டு, கோலமிட மறந்த வெளி
-இரவின் வானம்!
------------------------------------------------------------------
காற்றினால், செவி மடலத்தின் நடனம்.
-இசை!
------------------------------------------------------------------
"இடுக்கன் வருங்கால் நகுக"
படித்திருக்குமோ அறுவி?
விழும்போதும் பால் போல் சிரிக்கிறதே!
------------------------------------------------------------------
உலைஞ்ஞாயிரை உருக்கவல்ல,
உருகுமொரு உறையாபனித்துளி.
-காலம்.


ஆறு

No comments:

Post a Comment