Tuesday, December 13, 2011

குழந்தைத்தனம்.


பறவையும் கூட உதரிவிட்ட
தீண்ட தகாத,
உடலிழந்த இறகொன்று
தரையோடு தவித்திருந்ததது.....

தினம் தினம் ஆயிரம் ஜோடி விழி பதியும்
எல்லா பொது இடத்திலும்
ஏதோவொரு காணப்படாத மூலையில்
எப்பொழுதும் அது காத்து கிடந்தது!

அந்த பக்கமாய் விளையாடித்திரியும்
குழந்தையின் சொதனை பொருளாயாகும் வரையில்
கிடயாய் கிடந்தது...தலை மேல் பறக்கும்
பறவைகள் பார்த்து ஏங்கி தேய்ந்தது!

ராமன் பதம் பட்ட பாறை போல,
குழந்தை கை தொட்டு, வாய் ஊதியதுமே
சாபம் தீர்ந்தது....
சிட்டாய் காற்றோடு பறந்தது.

எல்லாம் இனிதே முடிந்தததுதெனினும்.....
எங்கோ பறந்து போன இறகை கேட்டு அழும்
அந்த குழந்தைக்கு தான் என்ன சொல்லி புரியவைப்பது?
- மா.ஆறுமுக பிரதீப்.

No comments:

Post a Comment