Tuesday, December 13, 2011

சதுரங்கமானவள்!


எதற்க்கும் வழி விடாத,         
எட்டு வைக்க பறக்காத,  
சிப்பாய் போலத்தான்
அவள் தயக்கம் காட்டுவாள்!

பிறநிறம் தொட்டும் பாராத,
பிடித்த பிடியாய் பயணிக்கும்,
மந்திரி போலத்தான்
செல்லப் பிடிவாதம் கொள்வாள்!

வில் பிரியும் அம்பாய்,
நேர்க்கோட்டில் வீரிடும் அந்த,
யானை போலத்தான்
ஆசைகோன்டு கழுத்தோடுப் பாய்வாள்!

எத்திக்கும் பாயும் காற்றாய்,
தனியொரு படையாய் வளையவரும்,
ராணி போலத்தான்
கருவிழி சுழற்றி கிறங்கடிப்பாள்!

தடுப்பார் என்றொன்று இன்றி,
தடை தாவும் அந்த
குதிரை போலத்தான்
தனித்தீவிலும் நினைவாய் தொடுவாள்!

எனை விட்டு தூரம்
பிரிந்தால் ஆவி அடங்கும்
ஆட்டம் முடியும்....
அந்த
சதுரங்க ராஜாவைப் போலத்தான்

என் வாழ்வில் அவளிருக்காள்!

2 comments: