Tuesday, February 16, 2016

தாயின் துண்டுகளில்...

புட்டி பாலின் முலைக் காம்பில்
தொட்டில் சீலை வெதுவெதுப்பில்
ஆயா தோளின் ஸ்பரிசத்தில்
அவள் உலர் கூந்தல் வாசத்தில்
அங்கம் அங்கமாய் தன்னயே சிதைத்து,
விட்டுச்செல்கிறாளொரு ஒரு தாய்.

அழுகிறாள், தேடிவிட்டு
கதறுகிறாள் குழந்தை...சிதறிகிடக்கும் 
தன் தாயின் துண்டுகளில்...
போதிய அளவு தாய் இருந்தும்
தாய்மை இல்லையாம்

-ஆறு

No comments:

Post a Comment