Saturday, March 3, 2018

அவரவர் வலிகள்...

இறகுகள் உடையவன் என்று 
இனம் பிரிக்கிறீர்கள்.
உனக்கென்ன கேடு என்று 
உண்மையில் கொஞ்சம் 
கலைந்த ஒப்பனைகளோடு. 
கை வாய்த்தவரே...கைப்பிடி 
வானம் விஞ்சியது உங்களுக்கு.
வஞ்சமில்லை. வாழ்க.
அடரும் விரிந்த இறகுகளின் கீழான 
அழுத்தம் ஒவ்வாமல் 
உயர எறிகிறது வானம்.
மிகுதி வானப் பகுதியும் 
என் இருப்பில்லை.
இறகுகளுக்கு சொந்தக்காரராய் 
இருப்பது இலகில்லை.  
-ஆறு 

No comments:

Post a Comment