Thursday, August 1, 2013

பாரதிப் பறவை




ஓவியம்,
ஆறு
By,
Aru


விளக்கம்:
பாரதி, நீ ஒரு பறவை!
(உன்)சொந்த இறகுகளை நம்பி
எந்த உடையும்-கிழையிலும் 
துளி பயமின்றி அமர்ந்தாய்,
கூறிய அலகு கொண்டு
அதில் மையூற்றி நிஜம் மறைக்கும்
நிழல் கிழித்தாய்,
"காக்கை, குருவி எங்கள் சா தி"
என முழக்கமிட்டாய்,
தொலைதூர கழுகு பார்வை
நீ கொண்டா ய்,
உன் நினைவுகள் வெறும் 
நினைவுகளா?
அவை வீரிய விதைகள் அன்றோ!
உன் வாழ்கை வெரும் வாழ்கையா?
அது வாழ்வியல் தத்துவம் அன்றோ!
நீ தனி ஒரு மனிதன் தானோ?
அன்றி, ஞானத்தின் ராஜபாட்டையோ?!
பாரதி, நீ ஒரு மோட்ச பறவை!
-ஆறு 

Sunday, June 23, 2013

A Blank Cheque

She gripped on to the sleek, shiny 'mp3' player like a sword. With a stern, unwavering look at the empty hallway...she inserted the headphones, as if she were strapping shields upon her smooth, dark brown shoulder. 'It is better to conquer yourself than to win a thousand battles', said Buddha. The conflicts of one’s own mind are superior to battles in inflicting pain and creating chaos. That is apparently why Buddha had equated 'winning (singular) thyself' not with a single battle, but with thousands. She was going through one such worse battle. In reality, the most cruel of all, according to Buddha! Music would be her defense now!

A whiff of fresh breeze, splash of soothing hues from the horizon, mellifluous violin strings all have the same effect. Each one of them is a tranquilizer. They all immobilize thoughts. Her brownish-black eyes danced with the music- a ballad; her thoughts slowed down, her footsteps too. As she was about to exit the hallway...she heard a balmy, manly voice calling her, 'Imai...!' from behind. She turned around to lock her enchanting eyes at Guha Amudhan’s.

Oh! How did I even miss to include the most humanly entry of all, to the list of tranquilizers? It is...gazing at the face of your loved one. Imai Yazhini suddenly felt a lot better. But a streak of her worries still lingered in her beautiful mind. A spark is enough to burn a forest!

"Is it new moon day by any chance?"

Her misty, ethereal eyebrows twisted as cliffhangers and her roseate lips split to utter 'whaat?!'.  She did not expect such a question! So much out of the place!  Guhan brought himself close to her, he drove off the two strands of her elegant hair, which were fondling around her forehead-dance floor, with his right index finger...tucked them behind her left ear, then held her face. With a warm look and concern in his voice, he questioned- "then, why’s my moon so dull? If its not new moon today!"

On any other day... she would have rewarded him for his, this half-baked effort to appease her. She squinted and plainly ignored his question.

“Come on, sssgo, have something for dinner”

“I’m not hungry! Neither am I in a mood to eat.”

“Alright, you don’t eat, jus come wimme, watch me eat, and then pay!'”

“Shameless! All right, I’m coming. But don’t you dare ask me what's wrong or why am I dull!”

“Deal!” he slipped on a mischievous smile masking over his lips, right underneath his mushy mustache. They walked out of the hallway, traversed the street and strolled into the restaurant right opposite to where they had been standing and conversing with each other a while ago.

The elderly Asian waiter Huan regarded the young customers and guided them to a speck-less, white spreadsheet covered table at a corner of the hall lit by a glorious candle.

“Give us a minute before we decide. Let us first have two glasses of water, without ice, please!”

Huan beamed her talk-of-the-town smile, and let the young couple be in each other's company. The hall was adorned with various paintings of Buddha amidst perennial streams and gracious peacocks. No wonder they were reminded of their homeland India.

Guhan let out a sigh, and asked- "Whass the matter?"

"You promised, you won't ask"

"Okay, don't temme, if u don wantt"

Imai stretched her arms to reach and hold his hand. "I am a total mess. I am not able decide between two big things. I don't know which way to proceed."

"Regarding what?" though Guhan somewhat guessed what could it be.

"Are you readhy thu ordher?" Huan gingerly placed the water glasses on their table, only to realize that she was being looked upon like an intruder!

"I'll haveA fried rice, pleaseee...nnn what would..." as he looked at Imai when she was disapprovingly nodding her head. "Umm...An apple smoothie, please" he finished.

Once again they both were left alone. For a time he tried to learn what was wrong with his ever-cheerful girl.

"I don’t’ know what's next. I really don't know why had I been running so far and hard. I am done with my courses, and I am torn between whether to be here or to go back. I really can't decide", her feeble voice trembled.

He had never seen Imai like that before. She always had been a strong, brave and cheerful woman. A tuft of worries clogged his throat. He cleared his throat, "Imai, I am going through the same thing. Here...look at me...lets jus give ourselves some more time to think. Everything's gonna be just fine!" She gestured to stop worrying further. But, a stone thrown into a clear pond is sure to cause disturbance. And, the disturbance will last as ripples long after the stone disappears from sight. The ripples of confusion still reverberated in her thoughts.

He managed to make her drink at least the smoothie. He finished eating. All the while, they tried neither to think nor to talk about the problem. Superficial sentences were exchanged.

Finally, it arrived. The bill. And a fortune cookie!

A strange lightening flashed within Imai's soul. More than 10% of life is not a calculated-choice. Some call it luck, some name it destiny, while some do not even bother to name it! As soon as Imai's eyes were laid on the fortune cookie, she had made up her mind with a crazy idea.

"I am going to let this fortune cookie decide my fortune!” she exclaimed.

"Have you gone off your rockers? You let that 'thing' decide your future? Please, NO, don't! "

"Shut up! I have decided. If the cookie tells anything with a positive tone, I am going back to India. Anything negative comes up...I am staying here".

Guhan realized the seriousness in her voice; he also did realize the danger that was ensuing. He hurried to grab the cookie to prevent Imai from taking it. Imai read his mind; after all she is a girl! She flicked the cookie from the tray before Guhan could reach it from the other end.

"Give it back, Imai!"

"No, wait! I am GOING to read, no matter what"

Guhan did not want to create a scene there. He modestly let her read thinking that he can handle later. Imai slowly opened the cover, broke the cookie into two halves. For some unknown reason, she felt that she gained her composure back. She hid the small, pink, glossy paper string in her right hand palm and started munching and enjoying the cookie.

Guhan would not wait anymore, "Are you not gonna read? Get done with it! We need to leave "
"One must always wait and wait must one always has to do" she taunted him with her husky voice. 

She held the paper strip to her eyeball level. All of a sudden Guhan saw Imai's eye brows writhe as a pair of worms. Her pupils dilated. She let out a muffled grunt - "Are you kidding!"
Guhan's heartbeat rose, feebly "What’s in there?"

"Nothing!" she said without taking her eyes off the paper.

"Come on...Jus spit it out!"

"There... isss.... litttterally.... NOTHING IN HERE! The sheet...is EMPTY!" saying so she held it for Guhan to have a look at.

Guhan was amused. A seed of laughter fell in the corner of his lips. It slowly began sprouting into a plant, then it grew into a tree and then into a forest tormented by a nasty storm. He had never laughed so much in the recent past. Imai joined the laughter party, although she initially fought not to!

And then, a sudden, strange conscious struck Imai. She seized to laugh; she stared at the Buddha painting like never before, and let out the following in a thrilled tone.
"Emptiness is the root of existence. Universe was initially pitch dark and empty. But now everything is possible. Everything stemmed from nothingness. Any greatest-of-great sentence in the place of the emptiness in this sheet would have evaporated the ocean of possibilities.  Now I can imaginarily join the infinite, invisible dots in the white, blank space to create my own possibility, at my own will; and I can keep doing it again…again…and again! Yes, zero is infinity!"    


Imai was still gazing at the Buddha, while Guhan was completely enthralled...wondering his astute girl!

Sunday, December 9, 2012

செருப்பு அருந்து போனது.


எனது கால் செருப்பு அருந்து விட்டது!
எதிர் பாராமல் அருந்து போகும் செருப்பு
எப்படி பட்டது தெரியுமா?
அது...தொண்டை வரை வந்து மறந்து போன வார்த்தை.
அது...காது அருந்து போன தைய்யல் ஊசி.
அது...நின்று போன கைக் கடிகாரம்!

நின்று போன கடிகாரம்
நேரத்தை முழுங்கும்,
அருந்து போன செருப்பு
நடு வீதியில் வைத்து மானத்தை வாங்கும்!
அய்யோ...எனது கால் செருப்பு அருந்து விட்டது!

மானத்திற்காக இல்லாவிடிலும்
முள்ளுக்கெனவேனும் தலை கவிழசெய்யும்,
தரை சூடும் செர்ந்து வாட்டும்!
பழகி போன பாதையிலும்
பார்த்து-பார்த்து பாதம் வைக்க சொல்லி
அச்சுறுத்தும்.
என்றைக்கும் இல்லாமல் காணாமல் போன
நடை பாதை தொழிலாளியை நினைக்க தூண்டும்!

ஒற்றை செருப்போடு நடை போடுவதா?
அருந்த செருப்பை கையில் கொண்டு தொடரவா?
ஒழிந்து போகட்டும் என வீசி எறிந்து போகவா?

மறு நாள் காலையில்
துக்கி எறிந்த செருப்பு 
அங்கே காணாமல் போனது.
எப்படி இருக்கிறதோ அப்படியே 
ஏற்றுக் கொண்ட யாரோட
போகியிருக்க வேண்டும்.

எனக்கு தான் அதை வைத்து கொள்ள ஆசை இல்லை
ஏனேனில், எனது அந்த செருப்பு அருந்து விட்டது!

-ஆறு.

சுருக்கங்கள்

கடந்து வந்த மனிதர்களில் அனேகம் பேர்
வெரும் சந்திப்புகளாய் சுருக்க படுகிறர்,
நினைவில்.
நினைவுகளுக்கு வெளியில் சந்திக்க நேர்கையில்
சுருக்கத்தின் தடங்கள் தவிர எதுவும் எஞ்சுவதில்லை
அவர்களிடம்!
-ஆறு.

Tuesday, December 4, 2012

நிறைவேற்றம் நிறைவல்லவே

சில வெகு நாள் ஆசைகள்
மரணத்தை போன்றவைகள்!
சர்வ நிச்சயமாய் ஒரு நாள்
உண்மையாகிவிடும் எனத் தெரியும்.
அப்படி ஆகிவிட்டால் தான்
அதை வைத்து என்ன செய்வதென்பது 
சுளுவாய் தெரிந்துவிடுவதில்லை!
-ஆ று


Saturday, December 1, 2012

The Never Exhausting Inclusiveness!


''heh-heh'', setting a derisive laughter, the stranger uttered,"so...you believe,that God exists." and "without having 100% exhaustive evidence?! "

"Before going into my belief; you tell me..don't you have one?! ", said the master.

"Why would I believe that God exist?... To believe an unproven theory is, insanity!"

"Well, then, your opinion makes you senseless!"

"What?!"

"Heh-heh" casting a derisive laughter, the master uttered, "So...you believe that: to believe an unproven theory is insanity! 
But...without having 100% exhaustive evidence?!"

-Aru

I love it, when 'love' is naked!


The eyelids drowned dreamily and then shot up, at once. One more time, they went down...and popped up; this time the difference being- rapid drown and sheepish open-up. They did not wait for another second. Finally the eyelids went shut tightly. The baby shuddered her shoulder, seeking a little more space & comfort within her mom's warm arms. Spilling a nostalgic smile, the baby fell asleep before even she realized that she was fast asleep, already. The mother, planted a deep kiss on the forehead and; exhaled a long breath of satisfaction.

"Hurray, I saw it. I saw love. Thiss issss love!", I exclaimed silently and went back home. At home, like a ruminant I chewed the emotive event again, again and again. Eventually i ended up in a spell of a strange trap.
"Wait, wait... that was 'Love' but what is that, 'that'? ". Many enthusiastic answers started to flow in. Many, too many, like...
"Love is life"
"Love is God"
"Love is blind"
"Love is crazy"
"Love is a biologic sensation". On and on it went.
I knew that I was not getting there. Most of the entries were actually adjectives, a description as in 'crazy' , 'blind'. Irony is that, I was expecting a noun, a perfect noun and not the nature. I sensed as if, I was held up in a trance or a linguistic trap. I was getting distracted, slowly my thoughts circled around an uneasy and peculiar entry. It was staring and stinging me a lot and it forced me to give a second thought. "Is Love really self-less?"

When an embrace is blanketed around, when a radiant smile is shared among; I call it 'Love'.  When a butcher earns for his son, when a soldier kills for his country; I still call it 'Love'. I can actually see via the word 'for', that a delicate flavor of selfishness is sprinkled upon. In fact, when seen with a magnifying glass, I can very well see that , 'core selfishness is what sugar coated and presented as love' . Selfishness that struggles to promote one's own something.

Fine then, that is not the same case always! How would I justify the situations where: I very well know that I am not the one, going to be benefited; still I do a favor to some stranger. How would I justify the act of overtaking a car, just to let them know that their door isn't locked properly? How would I justify the act of serving? Shouldn't they be included as selflessness of love? Well, I see a problem there too. "Gosh. I am so problematic!" In this case, instead of finding solace in getting something that I get, I am overwhelmed by the pleasure for giving something.  Now, I snapped my head by exclaiming, "It is love, which makes yielding, a pleasure. Yielding is nothing but selflessness. So love is selfless!"

Before drawing a conclusion, a gut feeling pushed me on. May be, 'Love' pushed me to go a little further. In here, the deciphering is elusive. It is a beautifully woven state, where I find happiness not for the well-being of myself, not for someone whom I know, but for some unknown being, could even be for a different species too. But it is mysteriously true that, I put myself in the centre. I do a deed, which makes me feel better. I do not abstain the feel. Instead, I move towards a target where, I feel comfortable and cherished. May be 'love' makes me try a different cuisine, unfortunately the spices are the same. As opposed to a circumstance where, I feel happy/comfortable by making my so-called loved ones comfortable/secure; this is slightly upgraded version, wherein I feel comfortable in making myself comfortable. In short, selfishness multiplied. The same thing is applicable for previous versions too, and so the combined effect is what that makes me feel more happy for doing things for my loved ones, than when I do for someone I barely know.

Surpassing all the pain that it inflicts, when I renounce a girl for her betterment, an unique sense of escapism and self-centeredness still exists. A case where, pain becomes adorable. Not everyone should necessarily be inclined to sweet, some enjoy bitterness! A different shade, still...that is a color. A different aroma, still...that is a taste. A different level, still...self-centered. A state of mind like self-sadism where, I would feel pleasure in self-torture. The act of doing something because- 'I wanted to do', is nothing less than selfishness.

Brimming with intense yearning to 'love' somebody - is it at least selfless love? Mmm...that is not more than finding an outlet for-what I have within me. It is an urgent pressure to vent out; in some extreme cases, at the least upon a lifeless object.

The deeper and deeper I go, the more personal it is getting. I see love's raw, barbaric figure. Selfishness is very closely associated with love. As the passion for love rises up, selfishness takes up a bigger stance, but still maintains to remain unnoticed. Actually it is ignored out of deliberate ignorance. 

"A tree's selfless love bores through skin, flourishes in the flesh and stops right at the centre of it's fruit."

Love is existing in a form that I assume not to be in. To put it clear, love exists in a form, I don't want it to be in! Why do I have a problem in viewing something as how it actually is? Why shouldn't I accept something happily for what it is? Who taught me to blindly say, "selfishness is bad, no matter what." ? Selfishness is core of 'love' which, I equate to the source of existence. Why cannot I allow something like "Love- because of which life is possible" to be itself?  

Now that, as always, I feel love to be very beautiful - when it is naked :p!
If you like it, please pass it on.

Yours Selfishly Loving,
Arumugapradeep.Marimuthu

Sunday, May 13, 2012

தோழிக்கு மடல்!

பெண் சுதத்ந்திர கொள்கையயும்
புதுமை எனும் தத்துவத்தையும்;
சிந்தனைகள் விடுத்து உடைகளில் சுறுக்கி கொண்டாய்...
நோக்கங்கள் விடுத்து செயல்களில் சுறுக்கி கொண்டாய்...
அகத்திலன்றி புறத்தில் சுறுக்கி கொண்டாய், தோழி!
ஏன் அப்படி சுறுக்கினாய்?

ஒரு நொடி போதும்
நான் உன் சிறை உடைக்க...
என்றபோதும் நானாய்ச் செயவதாய் இல்லை!
தத்தி வரும் பிள்ளை தன்னை வந்து தொட்டுவிட, மண்டியிட்டு
இரு கைகள் கொண்டு அழைக்கும் தாய் போல
மறு முனையில் காத்து கிடப்பேன், தோழி!
அதுவரையில் இந்த வரிகளை உறக்க
உனக்காக பாடி கிடப்பேன், தோழி!

Wednesday, April 25, 2012

இருளுக்கென ஒரு குணம் உண்டு!

சிறையிலிடுவது என்பது, கைதியை உள்ளிட்டு அறை கதவை பூட்டுவதில் மட்டுமே என்று கொள்ளாதீர். கைதியை வெளியே தவிக்க விட்டு அறைக்குள் தாம் சுகித்து கிடப்பதும்- சிறையிலிடுவது தான். இத்தனை இரவுகளாய் சிறை வாசம் தகித்த நிலவொளி, ஒரு உதவி செய்தவனின் கரத்தை ஆசை தீர பற்றியழும் மனிதனை போல, பெருமாள் சாமியின் கனுக் கையிறண்டயும் பற்றி கொண்டது.
பெருமாள் சாமி, சன்னல் கதவை திறந்து விட்டு கொண்டிருந்தார்.
  "ஒரே புளுக்கமா இருக்கு. ச்செ ச் ச்சே, இந்த கரண்டு போனா வெளிச்சமும் இல்லாம, புளுக்கத்துலையும் கிடக்கனும்...கொசு கடி வேற ஏதோ இலவச இணைப்பு போல"
சமையலறையிலிருந்து சன்னமான குரலில் பெருமாள் சாமியின் மனைவி,"பாபு என்ன செய்யுறான்னு பாருங்க, இருட்டுல எங்கயையாச்சும் இடுச்சுக்க போறான்."
  "பாபு...எங்க டா இருக்க? இருட்டுக்குள்ள என்னத்த செய்யுற?"
  "மேட்ச்சு பாத்திட்டு இருந்தேனா...கரண்டு போயிடுச்சு! அப்படியே உக்காந்துட்டேன் பா!"
இருளுக்கென ஒரு குணமுண்டு, பழக பழக மங்கலாய் பொருட்கள் தெரிய ஆரம்பிக்கும், பிறகு நன்றாய் பழகியே விடும். அந்த இரு வெளிச்சத்தின் துணையில் முற்றத்தில் தினசரி நாளிதழ் படிக்க அமரிதிருந்தவர், தன் மகன் இருக்கும் அறைக்குள் மிகவும் கவனமாய் நடக்க துவங்கினார்.
  "நீயும் அங்க என்னடி பைங்கிளி செய்யுற?இருட்டுக்ள்ளாற? "
  "ஒரு நிமிஷம் இருங்க...அரைகுறையா அறைச்சு கிடக்குற மாவ ஏதாச்சும் தட்டு போட்டு மூடிட்டு வந்திடுறேன்...பல்லி கில்லி விழுந்தாலும் சொல்றதுக்கில்ல!"
  "சரி, சரி வா." என்று சொன்னபடி இப்போதெல்லாம் மகனிடம் வந்து இருந்தார்.
  "ஏண்டா, ஏதோ ஸ்கூலுக்கு பீஸ் கட்டனும்னு சொல்லிட்டு இருந்த?! ஐனூத்தி என்பது தானே? காலைல மறக்காம அறு நூறா வாங்கிக்கோ!"
  "சரிப்பா. ஆனா அறு நூறு இல்ல, அறுனூத்தி இருபது வேனும்!"
  "எதுக்குடா?"
  "பின்ன, எனக்கு வாங்கி திங்க காசு வேணாமா?!"
  "டேய்! அது தான் மிச்சம் 20 இருகுல வழக்கமா அவ்வளவு தான கேப்ப!"
  "ஆமா பா...ஆனா, நான் லஞ்சு பீரியடுல தான பீஸ் கட்ட முடியும்! பர்ஸ்டு இண்டர்வெல் அதுக்கு முன்னாடியே வந்திடுமே, அப்போ பசிக்குமே. அஞ்சு ரூபாய் பொருளுக்கு நூறு ரூபாயா நீட்டினா, எதோ சொத்த எழுதி கேட்டாப்புல முறைப்பான். மட்டுமில்லாம, அத்தனை பணத்தையுமா வெளில எல்லத்துக்கும் முன்னாடி எடுக்குறது, ரிஸ்க்கு பா", என்று சொன்ன பாபுவின் குரலில் ஒரு குறும்பு தனம் இழையோடியது!
  "வெவரம் டா, எப் புடியும் பீஸ் கட்டினது போக உள்ள இருபது ரூபாய மறந்திடுவோம்...அது போக ஒரு இருபது ரூபாயா!"
  "போங்க பா", என்று குழைச்சலோடு மறுமொழி செய்தான்.

இதையெல்லாம் கேட்ட படி நின்றிருந்த பைங்கிளி, தன் மகனுக்கு ஒரு ஷொட்டு வைத்து விட்டு ஆரம்பித்தாள்,"இந்த வயசுலையே எம்புட்டு சூசாசனாமா இருக்குது புள்ள...நீ எல்லாம் வளந்து பெரிய அரசியல் தலைவராகு டா. இப்புடி பேசியே உலக வங்கிட்ட கடன் வாங்கி நிதி நிலமை எல்லாம் சரி செஞ்சுடுவ! ஆள பிறந்த ராசா டா, நீ!" என்று சொல்லி விட்டு தன் கனவனின் ஒப்புதலுக்காய் ஆசையோடு பெருமாள் சாமியை பார்த்தாள். அந்த இருட்டுலையும் அவளின் முகம் பெருமையில் பளிச்சிட்டது!
  "போடி...போடி...இவளே! அரசியலுக்கு அனுப்புறாளாம், சின்ன பையன கெடுக்காத...அவன் உறுப்புடட்டும்!"
  "அப்புடி என்ன சொல்ல கூடாதத சொல்லிட்டேனாம்!" என்று சலித்து விட்டு, கொஞ்சம் கருகிய முகத்தோடு தொடத்ந்தாள்,"சரி, இப்போதைக்கு கரண்டு வற்ராப்புல தெரில...அரைகுறையா அறைச்சு கிடந்தா நாளைக்கு, கடைல தான் வாங்கனும்...இல்லேனா நீங்க தான் ஆட்டுக்கல்லுல அறைச்சு தரனும்!"
  "ஹூம்! வேற வழி, எவன் காலங்கத்தால பைய்ய தூக்கிட்டு ஓடுறது...காசு வேற அழனும்! அறைச்சு தொலையுறேன்!" என்று கடுகடுத்தபடி பெருமாள் சாமி எழுந்து நடந்தார். இப்போது அந்த இருட்டு அவருக்கு பழகிவிட்டது போலும், சற்று சீறாகவே நடந்தார்! நடக்க நடக்க அவரின் குரல் தேய்ந்து கொண்டே இருந்தது, "இதையெல்லாம் தட்டி கேக்க புதுசா யாராச்சும் ஆட்சிக்கு வந்தா தான் உண்டு! ஹூம், எங்க பொறந்திருக்கானோ?"
-ஆறு.

Saturday, January 7, 2012

Nut Cracker (short thriller story)

The racing thunders of footsteps gets louder and louder; then slowly they faint one by one onto the side opposite from where the sound appeared initially. It is a rainy night and upon the road side shallow water-pits, the commotion caused by the tramp of four pairs of strong & brown boot, creates ripples on reflections of already flickering street lights. Tucked away behind the enormous tree, swallowed by darkness, the well-built dark figure fights to hold back his short and speeding breath. Slowly and with caution, still crawling on the ground, he peeps out to see the four police men at the street end. ''They are all armed!"

He can see. One of them, to other three khakhis, is giving silent signals to be vigilant. The blanket of air around is really damp. The swamp and marshy land is soft enough to bear the impression of his left arm elbow, upon which he is kneeling. Onto the right arm fingers with which he clutches the hefty barks of the tree trunk, he feels a sensation of something creeping on. Not able to hold it down, with a loud grunt of irritation, he hysterically sways his right arm. Falling on the ground with a thud, as an attempt of primary defense, it curls into a tight coli.

''milleeeepeddd'', he hisses, then looks into the direction from where a drop of mud-water percolation came flying and stuck upon his right cheek.

"Hold your hands up, NOW!", screams one of the four khakhis, who is now right in front of the kneeling victim. Other three, are backing up from various directions. Everyone is approaching with prudent steps and rapid pace, with their guns stretched in the front.

"Hold your hands up, NOW and freeze"

"NOW, NOW"

Still fixing his eyes there and slowly as he rises both the hands,

"Milleeepedd. Thought to be among the first to have colonized land. Huh...but that is just naat enough faar me to excuse ya! Neither is naat enough to be able faar ya to save yourself! "

"Take him...Fasten him...NOW!"

With that, a hard slap lands on his cheek and forces his face to turn away. A pair of intense eyes, stares at the name batch which reads, 'Karthikai Mainthan'. As the fiery eyes brims with hate, the other three police men drag him...he turns back one last time. His blackened lips below the sharp nose...gives in a broad smile at the slurry like dead milliped.

He turns to the front, the blackened lips freezes to smile, and slowly winces because of the direct sun light on his face. A moment ago, he was standing in a shade, when his turn came, he allowed himself to be checked by the metal detector. The detector gave a clearance beep. Now, he walks out of the security check into the work site. It is a huge rail station under construction. The greasy smell makes the air heavy and sultry. About a dozen of workers in the fluorescent uniform, run past him, wave at him and shout, "Prithvi, chief was searching for you."

"Ah! I am going! Where are you guys headed?"

"Final scrutiny before tomorrow's Inauguration", one of them yells as they all moves away.

"Better ya guys hurry up and double check and hurry up...its railway minister's personal interest!"

"Ha, ha. That's a good one!"

"Alright...I'll go meet the bull!"

"Don't forget to grab the red flag! Just in case! Might come in handy...you would never know! Alright...see you"

Prithvi stares blankly at the slowly approaching test car, gliding gently on the newly laid track. Warning signs, occasional jingles of metal clinging, the associated buzzing noise of the welding flashes those resembling a fountain of fire and finally a maddening crowd of hard helmet wearing workers...Prithvi has been experiencing this ambiance for 6 months and 3 days. Here, the next morning, the station is going to be open for the public. A station which is on the outskirts of the large city. Since the main station is just 30 minutes ahead, most of the trains have not been scheduled to stop here. This was built on a personal motive, a white collar pressure!

The fluttering red flag, stationed on the test car, brings Prithvi back to the moment. A blackened crescent rises on his face...most probably he is reminded of what his co-worker just mention a while ago!

The curve on the smiling blackened lips slowly fades away and winces out of pain. A strong hand is clutching Prithvi by his hair and starts jerking him to the side.

"Wherre have you planted it?"

"Your Job Mr.Karthick! I hate , poking ma nose into other's business."

Karthikai Mainthan raises his arm out of rage to thrash the convict...but ends up in answering the beeping wireless.

"Sir, please...we are doing our best! Railway police inside the train are reporting back. Yes, Yessss...but please understand Sir, we don' have t...Yess we ARRRE interrogating him since 4 AM...No, but he threatens to blow off in the middle if we cease the train in the middle....Just the operator is instructed to maintain the pace, We hardly have 5 minutes...Sir, unders..."

Prithvi kneels down, widely opens both his hands on to the sides, rise his chin up at the morning sky and heaves in a deep breath.

"What the hell are you doing? Now, that is the limit...I can't bear you anymore...you talk or you are dead!"

"So will all be, Mr.Karthick! Wait for the action...just two more minutes!"

Karthikai Mainthan, with all his might, gives him a hard kick. Tears moisten his eyes because of his inability, a deep wrath takes him...his nostrils flares out as if he is been possessed. They both can hear the approaching horn...

It gets louder and louder...

Karthikai Maithan yells out to his men to clear from there and he jumps at Prithvi pinning him down to the floor.

"Ask your man to stop or deactivate the sensor...NOW!"

Now, they both can feel the vibration...It gets stronger and stronger as the train approaches. Sweat on the skin surface, makes it difficult for the cop to hold the culprit firmly...Prithvi struggles to escape the hold...
The train approaches at maximum pace.

"Commme Onn....ya aar all just a second away from salvation"

"Oh my..."

A loud crash happens, the car behind the engine is thrown to the platform. It screeches along the floor spitting off sparkles and violent sound. Other three cars and the engine are severly damaged and are dangerously toppled about.

"Do ya realise that Mr.Karthick? I told yaa...it's a geeky trick...An effect equal to a bomb! I simply replaced the nuts by two-part locking nuts instead of the main nuts...having half size locking nuts to hold the stretcher bars! The train, when crossed that section at a speed more than 300 Km/hr, the lethal vibration was all that enough to cause this! Isn't that cool?"

"Look around what I have done...."

The less injured people in the train are all panicking and dishing out anguish cries. As the human crush intensifies, some people are trying to jump over the side. Not knowing what to do, each push the other,in an effort to run away. Children and weak individuals are thrown to the concrete ground and it bleeds from head...bruises every spot...more than the causality by the accident, stampede is killing many lives...panic everywhere!

"Law of entropy...Look around...everything tends to move from ordered state to disorder....look at the disorder and panic...this is what I want...there is nothing fake here...Look around....Look at the commotion I have created....look at my service to the TRUTH..."

"Now, you may slowly open your eyes Mr.Prithvi "

Prithvi is baffled, he is unable to comprehend what is going on. Some one is strongly suggesting him to slowly step out of the inner mind....very slowly....Prithvi opens his eyes. He can see a doctor and he is a dimly lit room. Karthikai Mainthan is also in the room, he is talking on the phone.

"Good job, team. We have done it!", Karthikai Mainthan disconnects the call, walks towards Prithvi, who is still lying on the bed.

"Only when you gave your identity through phone and dared us to catch you...I realized that you were not normal. After we caught you today early morning, we confirmed with the security agency that there was not one instance where, abnormal alarm buzzed when you entered or left. We had a doubt if you had your man inside the train who would activate the bomb, when it reaches the station and so we did not take the risk of stopping the train. So, I just gave a geeky try...by subjecting you to hypnosis.Trust me.... It works Man!"

"Ummm by the way...meet Dr.Pradeep, who played my role in your subconscious mind!"

***Subham****
-Arumugapradeep.Marimuthu

Tuesday, December 13, 2011

காதல் தொக்கு

சினுங்கலிட்டு கொஞ்சும் 
உன் சோம்பல்
இரவுப்படுத்துகிறது 
என் வானை!

பூட்டிய தேன்குழலில்
சூட்டிய முல்லை,
நிலவுபடுத்துகிறது
என் நிலத்தை!

நேத்தய கள்ளாய்
உசுப்பிவிட்டு எனை
பாடாய்படுத்துகிறது
நின் சேலை!

-------------------------------------
வாசனை முத்தம்
பறித்துக் தொடுத்து
முத்தகொத்து நீட்டினால்...
"கையில் தந்து போ" என்கிறாள்!
அவசரமாய் சேலை நெய்ய பழகனும்!
-------------------------------------

பூக்களை
பூக்கவைத்து பூக்கவைத்து
சலித்து விட்டதாம்
வசந்ததிற்கு...
நீ விதையாகிடு, கொடிதோரும்
வசந்தங்களே
பூத்துசெழிக்கட்டும்!

--------------------------------------
குறிஞ்சிப் பூ,
12 வசந்தங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும்
என்பார்களே!
நீ மட்டும் எப்படி,
ஒவ்வொரு தீண்டலுக்கும் பூக்கிறாய்?!


--------------------------------------

அரளிப் பார்வை
அவன் தர,
விஷத்தின் வீரியம்
முறிக்க முயன்று
மடிந்தது ஆடை.

சிறிது சிலிர்த்து
மெலிதாய் சிரித்து,
இன்னும் கேட்டு
மானம் பறித்தது
கெட்ட வெட்கம்.

அவன் விழிக்கொண்டு
துளி துளியாய்
விஷம் உதிர்த்தான்
ஒவ்வொரு துளியும்
ஆகியது அமுது!

-----------------------------
உன்னை போலவே,
உன் நிழர்படமும்,
என்னை மருந்துக்கும்
மதிப்பதாய் இல்லை.
எத்தனை முறை
முத்தம் கேட்டும்,
முறைத்தே பார்க்கிறது,
உன்னை போலவே!

-----------------------------
எப்போது பார்த்தாலும்
வெட்கமும்-விழியுமாக
அலைகிறாயே,
கண்மைப்பூச்சில் வெட்க்கம் குழைத்து
கைப்பையில் ஒளித்து கொள்வாயோ?
வேளை தவராமல் அதையிட்டு எனைக்கொல்வாயோ?

------------------------------
அவள் நெற்றியில் மட்டும்
நிலவு,
சிகப்புடுத்துகிறது!

------------------------------
எனது கண்னை கட்டிவிடாமல்
உன்னை மட்டும் முன் நிருத்தி,
உன் வீட்டு வாண்டுகள் கூட
கேலி செய்கிறதுகள்
நாம் கூடி கண்ணாமூச்சி ஆடுகயில்!

------------------------------
நெஞ்சு பதைக்கிறது,
நாளொருதரம் வெரும்
உன் பிம்பம் விழுங்கும்
நில கண்ணாடிக்கே
சர்க்கரை நோயாமே!!!
அய்யோ நான் செத்தேன்!

------------------------------
விரலிடுக்கில் நிலவு நசித்த
துகள் கொண்டு வரைந்தாலும்
அழகு படுத்த உனக்கு அக்கறை
இருப்பதாய் தெரியவில்லை!
பார்த்து பார்த்து பதம் வைக்கிறாய்
கோலமிடும் நீயே அதை மிதித்திடாமல்,
அட பைத்தியமே.....
பிழையில்லா பிள்ளைத்தமிழ் ஓர் இழப்பல்லவோ?!

-------------------------------
உளவு பார்க்க அனுப்பபட்ட காற்று
கொஞ்சம் திருடிச்சென்று ஒப்படைக்கிறது
சுகவாசத்தை உன் கூந்தலிருந்து....
பொல்லாபூக்களிடம்!

--------------------------------
செடியோடு ஒட்டியிருந்த இலையை
மெல்ல உன் காதில் நுழைத்து
சுகமாய் குடைந்தேன்.
கண்கள் சொருகி,
புருவம் உயர்த்தி,
கூச்சப்புன்னகை விளைத்து
தலைத்திறுப்பினாய்......
"என்னை வைத்து செய்"
என மற்ற இலைகளும் கெஞ்சின !
---------------------------------------

அண்ட வெளியின் நவமணியையோ,
நகை பெட்டியின் நட்சத்திரங்களையோ,
தேடித் திருடி, சொற்களாய் 
நெற்றிப் பொட்டில் சூட்டி விட்டாய்!
உனக்கென்ன?!!!
காணாது போன அந்த வார்த்தைகளுக்காக 
என்னை தேடி வந்த மொழிக் காவலன் 
எனது மொளன கூட்டையல்லவா உடைக்கிறான்...
வர வர தனியே உளருகிறேன்
ஒரு பித்து போல!


-------------------------------------------------------


உன்னை பற்றிய நினைவுகளை
சேமித்து வைக்க இடம் தேடினால் மட்டும்
எப்படித்தான் கையளவு இதயத்தின்
கொள்ளளவு விரிகிறதோ?!
----------------------------------------------------------


நகங்களால் நீ கீறிவிட்ட காயங்களின் மேலே
நீ அப்படிச் செய்த தருணங்களின் நினைவுகளை பூசினால்...
அப்பப்பா....இணையொரு மருந்தில்லையடா!


----------------------------------------------------------


நிலவென்றழைத்தாய்!
நிலவுதான்...
குவித்து வைத்த உன் உள்ளங்கையில்
கன்னம் உரசித் தேய துடிக்கும்,
நிலவு! 


----------------------------------------------------------


நிலவின் வளர்-தேய் சுழர்ச்சி 
மட்டுமே நம்பி நாட்குறித்த 
பண்டை காலத்தில், நல்ல வேளை
நீ பிறக்க வில்லை.
நீ தான் தேய்வதே இல்லயே!


-----------------------------------------------------------


எப்போது திறும்புவாய்...எப்போது திறும்புவாய்

என தலை கீழாய் தொங்கிக் தவமிருந்து,
நீ திறும்பும் விசையில் உன் கண்ணம் உரசும்
தோடுகள் தாம் என் முன்மாதிரிகள்.
"ஓம்.. லோலாக்கு டோல் டப்பி மா!"


------------------------------------------------------------

காவிரிக் கார்வெள்ளம்  
கரையரிக்கும் பொழுதில் ஒதுங்கும் நுரை- அது 
பல கண்ணி-சடை வார் சீப்பில் சிக்கிய 
கன்னியின் முடி!
இன்னும் சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில்- அது
யாரும் கேளாமலே 
ஒரு மயில் போட்ட இறகு!

---------------------------------------
குடித்து விட்டு
'தகிட ததுமி' ஆடலாவேன்
என பீடித்தே பூட்டி வைத்தாயோ
உன் உத( ட்)டுக(ள்)ளை?!
----------------------------------------

உன்னுடைய பழையதொரு வெண் தாவனியையா
வயலில் காகம் விரட்ட கட்டி வைப்பான்
உன் அப்பன்?!
எப்போதோ இந்த உலகை விட்டு
மறைந்து போன 
அன்னப் பறவையின் கடைசி இறகு
இப்போது கிடைத்து விட்டதாய் நம்பி,
அறிவியல் ஆர்வலரெல்லாம்
உன் வயலில் மொய்த்துவிட்டார்களடி!
---------------------------------------

மின்னல் ஒழுகியதை 
மொழுக பூசியாற்போல் 
மெலிதாய் சிரித்துவிடுகிறாய்,
இடியோசை என் இதையத்தில்
மழை வாசம் நம் முற்றத்தில்!
---------------------------------------

புயல் முன்னறியும் கருவி, 
உனை கடக்கையில் எல்லாம் எச்சரித்து ஓலமிடுகிறது!
விழியுருட்டி புயல் திரட்டும் கலை 
ஏன் தான் கற்றாயோ, தோழி?!

---------------------------------------
கைகளுள் மிகாமல் அடங்கும் 
உன் முக வடிவு
கண் இரண்டில் ஒருபோதும்
அடங்கா!
-----------------------------------
கவிதைகளை கர்பமுற்ற, 
தனித்துவிட பட்ட எல்லா இரவுகளிலும், 
எரிந்த உன் நினைவுகளின் 
சாம்பலயே தொட்டு-தொட்டு தின்ன
தேடி அலையாய் அலைகிறது, எழுத்தாணி!
போகட்டும் அதுவும் நன்மைக்கே!
பேறுகாலம் களிந்து, பட்டுவெண் 
காகிதத்தில் இதமாய் சுற்றி
அம்மழளைகளை நீட்டினால்...
யவர் சாடை, யாரை போல்
என்று விவாதிக்க வழியில்லை!
உன் மௌனம் திரண்ட விழியின்,
நாடி பள்ளத்தின், நாசிமுனை பொன்மச்சத்தின்,
இதழோர சிருபனிப்பருவின்
தன்மைகளை தனித் தனியே 
பாகத்திற்கோர் மகள் கண்டு, ஏமாந்து
போகட்டும் கலகமூட்டும் உன தங்கங்கள்!
-------------------------------------------
கோர்க்க வரும் உன் கரங்களை
தட்டி விட்டபடி நான்...
அவைகளை எனை கட்டியனைக்க
நீ மிச்சம் வைப்பாய் என!
--------------------------------------------

மேகம் ததும்பும் நற்தேகம்தனால் போதையுற்று 
கதிதேடி தள்ளாடிவிழும் எனதாவியினை, 
தொழில் மறந்துன் முல்லைச்சுடர் முறுவல், 
தடுத்து, நட்டவெளியில்-நிறுத்தி உறையச்செய்கிறது! 
விட்டுவிடடி என் ஆவியை! இன்றேனும் உன்னடி மோதி 
சுக்கு-நூறாய் நொறுங்கட்டும்... 
-விட்டில், அது, அதற்கெனவே படைக்க பட்டது!

---------------------------------------------

நம்மளது ஒரு பெரிய
கூட்டு குடும்பம்.
எல்லோரும் சாப்பிட்டு போன பின்
எப்போதும் கடைசியில் வரும் எனக்காக,
நீ பத்திர படுத்தி வைக்கும்
பலகாரத்தை போல,
உன்னை எனக்காக இத்தனை நாள்
பத்திர படுத்தி வைத்திருந்தது,
நம் வாழ்கை!
------------------------------------------------

உன் இரு(கிய) மருங்கின் அருகே
அருகி விடுகிறது காலம்.
அருந்து விடுகிறது சோகம்-சொகம்!
ஏதுமற்ற வெற்றுத் திக்கினில் 
விளைந்து துலங்குகிறதென் மோக்ஷம்!


------------------------------------------------
பார்கடலின் அலை வந்து
கணுக்கால் தொடுவதும்... 
பின்னோடுவதுமாய்;
அருகில் முகம் பதித்த உன்
மெல்லிய மூச்சு....
என் கழுத்தில்!

--------------------------------------------------

பேரழகி தான்...ஆனாலும்
கடவுளுக்கும் குறுக்கு புத்தி
தூண்டும் அதி பயங்கரி நீ!

கொள்ளை கொள்ளையாய் கோபம் வந்து
'ஏன்?' என்றாய்!

அரைத்த மஞ்சளை கையளவு அள்ளி
பிள்ளையார் பிடிக்காதே என்றால்
கேட்கிறாயா.

ஒன்றும் புரியதவளாய் முழித்தாய்.

பின்னே, உருவாக்குதலும் தாய்மை
செயல் தானே,
கிடைத்தடா ஒரு சாக்கு
என்று அதை சொல்லி
கல்யானத்துக்கு தயாராகி
நிற்கிறார்
'தாயை போல' தாரம்
தேடும் பிள்ளையார்!
-----------------------------------------------------------------

''எங்காவது கூட்டிப் போ''
என்றாய்.

''திகில் படம்?!'' என்றேன்.

''சரியா போச்சு போ,
ஏன் தான் உன் ரசனை இப்படி போகுது'' என்றாய்.

"என் ரசனைக்கு என்ன கேடு?
ஒவ்வொரு திகில் காட்சியிலும்
மன்சள் விரல் பதிய இருக என் சட்டை பிடித்து
மார்பில் முகம் புதைத்து- 'முடிஞ்சிருச்சா...முடிஞ்சிருச்சானு' கேட்பாயே
அதை ரசிப்பது என்ன மட்டமான ரசனை?!"

"ச்சீ போ..பட பட னு வரும்...
நான் வரலப்பா!"

"உனக்கு தட தடக்கும்
பயத்தில்...
எனக்கும் தான்...
என்ன ஒன்று, 
பயம் தான் இராது!" என்றேன்.
-----------------------------------------------------------------

நம்ம வீட்டு தண்ணீர் 
ஆச்சாராமானது என்றேன்.

'ம்ம் வேற!' என்றாய்
நம்பதவள் போல.

"அசடு...
நீ எழுந்து,
காலையில் அடுப்பை 
பற்ற வைக்கும் 
முன் ஒரு முறை;
மாலையில் அசதி களைய
ஒரு முறை
என்று....
ஒரு நாளில் இரண்டு முறை
குளித்து விடுகிறதே 
நம் வீட்டு 
குழாய் நீர்,
அப்போ அது ஆச்சாரம் இல்லாம
என்னவாம்?" என்றேன்.

"ஏதாது உளரீட்டே இருக்காதீங்க"
என்றாய், லேசாய் என்னைக் கிள்ளி!

------------------------------------------------------------

'குடித்தல் எனும் செயல் அழகை குறைக்காது'
'இமைத்தலில் எல்லாம் நேரம் கரையாது'
'ஒளியை வெல்லும் வேகம் வெட்கத்திடம்'
இன்னும் எத்தனையோ(?!) விசித்திர விதிகள்...
அவள் விழியுலகில்!

--------------------------------------------------------

கன்னமிரண்டயும் தாங்கும் உனது
உள்ளங்கையின் மித வெப்பத்தில்
உருகி... ஜீவ நதியாய் உனது
ரேகைகளுக்குள் ஓடிவிடத் தான்
முயல்கிறேன்.....
மிகச் சிறியவள் தான்....சிந்தாமல்,
முழுவதுமாய் உனது ரேகைக்குள்
பாய்ந்து விட என்னால் முடியும் தான்...
உன் மீதான என் காதல் அப்படி அல்ல!
நான் உருக, என்னோடு பெறுகி வரும்
காதல் வெள்ளம் சிதறி விழுந்து விடலாம்.
அனுமதிக்காதே! நானோ, காதலோ
உன் கை மீறி போக!

----------------------------------------------------------


கை நிறைய உனையள்ளி

அதிலெந்தன் பிம்பம் பார்க்கத்துடித்தேன்.
விரலிடுக்கில் வழிந்து விட்டாய்,
உயிர் திரவம் உலர்த்திவிட்டாய்!
எனது கண்ணீர் துளி
அனாதையாகுமுன்னே
வந்திடு பெண்னே!

-----------------------------------------------------------

இதழ் சுளித்து கொளுத்தி போடுகையிலும்
இதமளிக்கும் விரல் தொடுகையிலும்

சோளியாய் சிரித்து விடுகையிலும்
பொலிவாய் பார்வைகள் கவரி விடுகையிலும்
மிகச்சாதாரணமாய் உடுத்திக் கொள்கையிலும்
முகத்தில் பருக்கள் தாங்குகையிலும்
உலர்ந்து, உடைந்து,நரைத்து போகையிலும்...
இப்படி எல்லா நேரங்களிலும்
அவளின் அழகு, எனது பார்வைக்குள்!
அவளின் வசீகரம், எனது புரிதலுக்குள்!
-------------------------------------------------------------
இந்த துணிகளை போல
உன் மூச்சுச் சூடும் 
ஒரு பொருளாய் இருந்து விட கூடாதா?
ஊருக்கு அவசியமாய் 
கிளம்பையில் இரெண்டை எடுத்து 
துணியோடு துணியாய் மடித்து 
பெட்டியில் போட்டு 
புறப்படலாமே!

---------------------------------------------------------------

மாரிவிற்களுக்கு சிறகுகள் பரிசளிப்பதுமாய்...

குட்டிக் குமிழ்களுக்குள் குடி கொள்வதுமாய்....
நிலாக்களை கொஞ்சி முயற்கூண்டில் வளர்ப்பதுமாய்...
வனதேவதைகள்.
அதிசயங்கள் நிகழ்துவதெல்லாம்,
தட்டுபடாத வனதேவதைகளின் 
ஒட்டுமொத்த குத்தகையே- எனுமென் 
ஆய்வுகளின் அறுதித்தீர்மானத்தை அன்றாடம்
அச்சுறுத்தவே செய்கிறாய் நீ-
கனிந்த மனத்தால் வாஞ்சையை பரப்பி,
தெளிந்த செயலால் வாழ்கையை நிறப்பி!

------------------------------------------------------------------


ஆனயும் பூனயுங்காட்டி, 
மூனுகண்ணே கத சொல்லி மிரட்டி
மம்மு சாப்புட வைக்கும் ஆத்தா போல
வராத தும்மல வம்படியா வரவச்சும்,
இல்லாத இருமல இழுத்துஞ்செருமியும்,
வேலையத்து குறுக்க-நெடுக்க கடந்தும்; 
ஒத்தவாட்டி ஒம் முட்டகண்ணுக்கு
ஒத்த வாய் என்ன நா ஊட்டிவிடுறதுகுள்ள!!! 
எப்பே...நீ அராத்து புள்ள!

ஆனைக்கும் பூனைக்கும் காத்திருக்கல நா
அட நீ கடந்து போகவூம் பாத்திருக்கல
வெறும் ஒம் பேர கேட்டுட்டு பசிச்சு தவிக்குறேன்
ஒன் நெனப்பு வந்துபுட்டா தவிச்சு நிக்குறேன்
தெரிஞ்சுக்கடி...நெசமாவே நா ரொம்ப சமத்து புள்ள!
---------------------------------------------------------------------
நீக்கமற நிறைந்திருந்தும்
புறகண்ணில் படாத
உயிர் காற்றைப் 
போலொரு முத்தக் கூரை 
வேய்ந்து கொடுத்து
அதிலென்னை அமர்த்தி 
வைத்திருந்தாய் போல!!!
இதோ, இந்த தண்ணீரில் மூழ்கிகொண்டு
மூச்சுத் திணரையில்,
நீயின்மை...கன்னத்தில்
அறைந்து உணர்த்துகிறது!
------------------------------------------------------------------
வெட்கம் விசைதறியாடும் தொங்கட்டானுக்கும்
விரகம் வேர்ஊன்றி கிடக்கும் உன் மூக்குத்திக்கும்
தூரம் அதிகமில்லை! 
'விரைவதா? விலகி...நானாய் தரும் வரை 
நடித்து நாணவா?'- விளங்காமல் தவிக்கும் 
உன் இருமுனை காதல் கத்தியால் 
கிழித்து-உண்டது போக மிச்சமிருக்கும் என்னை 
எனக்கு கொடு, போதும்.
அதுவே அதிகம்!

---------------------------------------------------------------------
கெரகமா இல்லியானு சர்ச்சையா கெடக்கும்
ப்ளூட்டோவ கூட படம் புடிச்சி போட்டாய்ங்க புள்ள;
கெரகம் புடிச்ச ஓங்காதல், காயா-பழமா?
கழுத... கருத்துல நின்னு கெரகமாடாத புள்ள!
----------------------------------------------------------------------------
எட்டாக் கிளைகளால் உந்தப்பட்டு
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து உயர்ந்த
பரிணாம கோட்பாட்டையே பரிகசிக்கும் 
உன்னிடம்,
என் வாசல் கடக்கும் உன்னை ரசிக்கும் பொருட்டு
என் வீட்டுச் சுவற்றுக்கும் அப்பால் வளர்ந்து நிற்கும்
பூங்கொடிகளை உதாரணமாய் காட்டினால்....
படுத்துருண்டு சிரிப்பாயோ?!
--------------------------------------------------------------------------

இலையின் நரம்புவழி 
பரவியது நிலவின் முத்துச்சுடர்.
உன் மூச்சில் அதிரும் இலைகள்
ஒளியை உதறுகிறது அத்துவானக் காட்டின்
தரையில்!
வனமெல்லாம் உன் மணம் பெருக்கெடுத்து,
மோதி நிலவுடைத்து நட்சத்திரங்களாய்
வானெல்லாம் சிதறவிடுகிறது!
இதற்காக எல்லாம் தான்
அந்தக் காட்டின் வெள் உவா இரவில்; 
அந்த இரவாய்,
அந்த நிலவாய்,
அந்தக் காடாய், 
என்றுமே நான்.
-ஆறு
----------------------------------------------------------------------------
பக்குவமடைந்தோமென சுய போதனையுடைய
பயமறியா இளங்கன்றுத் துளிகள், 
தொப்புள் கொடி அறுத்துச் சிதறி...
பிரசவித்த மேக நாளங்களில் எல்லாம்
வலிக்கீற்றுகள் மின்னலாய் கிளைந்து
கோர ஒலிகளைக் கடைய...
ஓலங்களை சப்தித்த படி
இல்லா சிறகுகள் கொண்டு பறக்கவே,
தோற்றுப் போன குறைமாதத் துளிகள் யாவும்
மண்தலையில் எதிரொலித்து மீண்டும்
மேகம்புக ஊளையிடும் ஒரு மழைகால மாலையிது!
நிழல் கூந்தலை தரையில் உலர்த்தியபடி
காலணி சூழா நின் மென்குதிங்கால்  மெத்திட்ட 
கர்ப்ப குளிகளில் அகலிகை துளிகளை 
சிசுக்களாக்கி இறகுகளை கிளர்த்திவிட,
வா, கை பிடித்து மிதந்து...
சாம்பலிருந்தும் உயிர் திரிக்கவல்ல
தரைதொடுங்கறுமேக சந்ததியே!
----------------------------------------------------------------
சொட்டு மருந்தளவில் துளித் தேனை
வைத்துகொண்டு இத்தனை இரைச்சலெதற்கு
கண்விழிக்கையில், இந்த காந்தள் மலருக்கு?
நீயெல்லாம் குடம் குடமாய்
அழகை தேக்கி வைத்துகொண்டு
அலட்டி கொள்வதே இல்லையே!
------------------------------------------------

பூமலர்வது இரைச்சலாகவும்
பூவையவள் வளையோசை 
இறைச்செயலாகவும் கேட்டால்
காதல் உன் மேல் ஏறிவிட்டது
என்றுணர்க!

-------------------------------------------------

கண்படாமலிருக்க...
கட்டிகொண்டிருக்கும்
கலசங்களுக்கே தட்டி போட்டு
மறைத்து பார்த்திருகிறோம்!
திறப்பு விழா கண்டபிறகும்
வெட்கமுடுத்தி ஏன் மறைக்கிறாய்
எதுகையயும் மோனையயும்?!

-----------------------------------------------------------

உதடுகள் அழுந்திப் பொருத்த
உடல் சிலிர்த்துப் பிண்ண
ஓரப் பார்வைகளில்...உண்மையில் கொஞ்சம்
கோரப் பார்வைகளில் கண்கள் மல்க,
தேக சூட்டில் பெய்யும்
வேர்க்கை பொழிவை எதிர் பார்த்தோ
உன்னிரு மார் நன் கொடைகளை
கொடையாய் அளித்தாய் இந்த
கலவிப் பொழுதில்?!

----------------------------------------------------------


தொடுவானத்தை பற்றிய
என் கருத்தினை
யாரேனும் கேட்க நேர்ந்தால்:
தொடர்பு எல்லைக்குள்ளாகவே,
எண்களுக்கு பின்னால் 
ஒளிந்து கொள்பவள் 
எண்ணங்களுக்கு பின்னால் 
ஒளிர்ந்து கொல்பவள்
ஒருத்தி இருக்கிறாள்.
அழைக்கவும் முடியாத 
அளிக்கவும் முடியாத
எண்ணுக்கு சொந்தக்காரி.

----------------------------------


வாழ்வின் நீளமெல்லாம் 
நீ சுருக்கி-நீட்டி உதிர்க்கும்
சொற்கள்சார் பக்கவிளைவு தானடி.
நிகழாமல் கடக்கும் நம் சந்திப்பின்
நீண்ட மௌனத்தால்... 
என் ஆயுள் சுருண்டு மரிக்கும், 
காற்றை ஒண்டி குடிக்கும் 
(வெறும்) காயம் கொண்ட பாம்பாய்!

--------------------------------------------------------
பிறந்த பிஞ்சை நெஞ்சோடு 
இருக அணைக்கும் தாய் குரங்கினை
காட்சியாக்குகிறாய்..நெருங்க வரும்
எனக்கு, உன் சீலையை பற்றிக் கொண்டு.
இழந்தால்...பொழிந்தால்...
மேகம் அழகடி பேதையே!

-----------------------------------------------------

"ந்தாரு மாமா! நானாக்கும் த்ரிஷ்டி பொட்டு?!
நீந்தே த்ரிஷ்டி பொட்டு, 
வரமொற இல்லாத ஓம்மட வேட்டி கட்டு"
என ஏகதுக்கும் சிலுப்புகிறாய்!

தீராத வெண்த்துணிக் காட்டின் 
ஓயாதந்த ஒற்றை சலிப்புபூக்களிடையே
மச்சக் கணையாய், வெரும் ஒற்றை மஞ்சக் கறையாய்
கவனமீர்க்க...அடி கிழத்தி...
என்னால் ஆகுமோடி?!
எனைத்தான் த்ரிஷ்டி பொட்டென உயர்த்தி,
சொன்னாலது தகுமோடி?!

--------------------------------

கலி காலமுன்னு நெனச்சானோ
ஆள் வராம 
கல்லா காலியாகி தவிச்சானோ
காவி வேட்டிகள நம்பாம
வாள் முனைக்கு வழியில்லாம
விளம்பரம் ஒன்னு 
சொர்கத்த விவரிச்சு எடுத்தான்...
சொர்னமே உன்ன எனக்கு கொடுத்தான்.

அவ முக தசை வரிகள்'ல திசை முகவரி எழுதி நீட்டலாம்
இன்ன இன்ன பாகத்துல என்ன என்னவோ
ஜகஜாலம் காட்டலாம்...
ஒத்த பருக்கைய தாண்டி சோத்து பானையில
கவனம் எனக்கில்ல பரமா....
சொர்கமேன்னாலும் அது நம்மாள போல வருமா?!  

-------------------------------

"கரி"யில், "கறையடி"யில், 
"நால்வாய்"யில், "பெருமா"வில் 
கொப்பளிக்கும் 
தனித்துவம்- அது
தலைமறையும்- 
இரட்டை எழுத்து "யானை"க்குள்,
எல்லாப் பருமனையும்- யானையின் 
பலகுண பலத்தையும்
தினித்து விடுகிறது 
எண்ணம், ஏனோ!
திடீரென்று, அத்தனை கனமாய்
தோன்றவில்லை யானை!
அழகை குறிக்கும் சொற்களுள்
உனது பெயருக்கு அழுத்தம் அதிகமென
வீரிட்டு பிளீரிடுகிறது துலாபாரம்,
வெறும் எழுத்துக்களாய் 
இளைப்பாறும் பொழுதிலும்!

------------------------------------

காட்டாற்றின் கரை கரைந்துருக
கறிய பெரும்பாறை கனிந்துருள
கவின்மலர்தம் மென் தேகங்கொண்ட
பொல்லா நாணலோ...நளினமேந்தி, விசை பாடி!

அவ்வண்ணமே நறுமகளவள் நாணமுமே!
செம்மண்ணுமே விரைந்தொழுகிய  பெருங்கரை என்ன?
தென்வன்ணமே தான் கொண்ட கடும்பாறை என்ன?- விழுந்தேனடி,
நின் எண்ணமே உதித்தெழும் வெறும் நாணல் இடறி!

நாணலும் நாணமும் போலன்றி 
ஏறு வெயில் முகம் மலர்த்தி 
எழில் சூழும், தளிர்மலர் சூடும் 
ஏந்திழை நேரிழை குழல் விரித்து 
ஏந்தி எனைப்பித்தாய் வைகரைத்தெய்வமே!

-------------------------------------------

மெய் மெழுகும் நெய்யாகி
தீ வளர்த்து ஒழுகுதடி.
முத்தத்தின் மிச்சமாய்...
உன் மூக்குத்தி கல் 
என் தாடையில் பதித்த 
வட்ட தடத்துக்குள்
வாட்டத்துக்குண்டானேனடி,
அந்த நெய்தல் நிலத்து மீனாய்!

-------------------------------------------

ஒலிக்கதிர்களை
நெல் மணிகளாய்
கொத்தி கொத்தி
தின்னும் கிளிகள் 
பாடலின் மும்மரத்தில்
வயல்களை சிந்திவிடுகின்றன....
அவைகள் தின்று, பாடி, 
பறந்து போன வழியெல்லாம் !

ஈரமான உன் கடற்கரை குதியங்காலிலிருந்து 
குறுமணல்துகள்கள் சிதறிவிழுகையில் 
அந்த கிளிகள் பிறந்திருக்க வேண்டும்!

------------------------------------------------

"அன்னமே!" என்றவனை
அன்மையில் அழைத்து
ரகசியுமும் கவர் ரசாயனமும் கசியும்
குரலில்
"பாலில் இருந்து நீரை பிரிக்க தெரியாதே!!!"
என்றாய்.
"பிரித்தல் போன்ற வன்மமெல்லாம் 
உன் இயல்பிலில்லை,
வண்ணத்தில் உடுத்துபவளாய் அன்றி
வண்ணங்களை உடுத்துபவளானதால்...
நிறங்களையேல்லாம் இணைத்துருக்கி
வெண்மையை உடை போல
உடுத்துபவளானதால்...
நீ அன்னம்!"

---------------------------------------------------

குறுந்தகடில் பதிவிட்ட  பாடலடி 
உன் நினைவுகள்.
எத்தனை முறை கேட்டிருப்பேன்...
துளியும் துல்லியம் தேயலேயேடி!
அகண்டு உலர்ந்த பாலைவனத்தின் 
மேற்கூரையாய்...கருமேகம் எதற்கடி?
காலத்தின் இறுதி வரை முளையாமல்
மக்கிப்போவதே மேலடி.
கைதவறி எனை அழைத்தாயோடி?
மனம்தவறி எடுத்துத்தேனோடி?
இன்னும் காதில் ஒலிக்குதடி- நீ
பதறிப்பதறி துண்டித்த நொடி!
நடந்தது கடந்துபோகட்டும்- அடி
உயிரே உள்ளதை உரைத்துவிடாதே!!
விதையாய் மக்கிவிடுவது சுலபம்
விளைபயிராகி கருகிடவேண்டுவது 
என் தற்போதைய சபலம்!

---------------------------------------------------

நாளங்களில் 
துருவேறி கிடப்பவனில்
துருதுருப்பை பாய்ச்சவல்லது
குருகுருத்த பார்வையுடைய
உன்னிரு கிளி!

நாளங்களில்
நாண் ஏறி கிடப்பவளை 
வளைத்து நாண் பூட்டவல்லது 
நான் நினையாமல் நீ தரும்
தீன்முத்தம்! 

---------------------------------------------------

சேலைகளின் 
தலைப்பு செய்தி-அவள்
கொலுசுகளின் 
மணி மண்டபம்.
அவள் அடவாதங்களே* 
கடிகாரங்களின் முள்கிரீடம்!
-ஆறு

*அடவாதம்- பிடிவாதம் 

----------------------------------------------------

"கவனம்!
தேவதை நடமாட்டம்!"
என்னும் பலகையை
சாமத்தில் யாருக்கும் தெரியாமல்
உன் வீட்டு வாசலில் நட்டுவைத்த கைய்யோடு
தேடிகொண்டு இருக்கிறேன்...
"காதல் ஒரு மிகை
கடலை ஒரு தேய்வழக்கு"
என்று பினாத்திக் கொண்டு திரிந்த
அந்த மானஸ்த்தனை.
என்னுள்.
-----------------------------------------------------

சேர்த்தள்ளி நாடாவுக்குள் நீ முடிந்த
கட்டு மூங்கிலின் கயிர் அவிழ...
உருவி ஒற்றை மயிர் மூங்கில் நழுவிச்சரிந்த
விசைப் பாதையாய்...
ஆமாம்...அந்த விசைப்பாதையின்
தீட்டலாய்த்தான் உன் கீழுதட்டு வரி
எனதிந்த கவிதைக்குள் புகுந்திதை
ஓவியமாக்கிற்று!

------------------------------------------------------

ஊற்றுக்குழி மனதில்,
நித்தமும் ஊற்றெடுப்பது...
நீர்!

------------------------------------------------------
மூச்சில் அவிழ்ந்த கார் குழல்
மலைகள்தம்மில் மோதியும், 
பொழிவில்லை.
மேகத்திற்கு அது
பொலிவில்லை.
பலங்கொண்டு பற்றி இழு...
முகட்டின் விளிம்பில் 
பரிதவித்தது போதும்!
உதட்டின் விசும்பலின்
பெருங்குரல் தன்னின் 
முனைப்போடும், 
உதிரட்டும் மழைமல்லிச் சரம்.
உன் மூர்கத்தே சாவதும் வரம்!
-ஆறு

-ஆறு.